திருப்பதி கோவிலில் 2019-ம் ஆண்டு ரூ.1,161 கோடி உண்டியல் வசூல் - 12 கோடியே 49 லட்சம் லட்டுகள் விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


பிரம்மோற்சவ விழா மற்றும் பவுர்ணமி கருடசேவை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.

2019-ம் ஆண்டு கோவில் உண்டியல் வருமானம் ரூ.1161 கோடியே 74 லட்சம் வந்துள்ளது. 2 கோடியே 79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 12 கோடியே 49 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

6 கோடி 46 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு 2 கோடியே 68 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ரூ.1066 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் ரூ.95 கோடி உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகரித்தது. இலவச தரிசனத்திற்கு 6 மணி நேரம் ரூ.300 கட்டண தரிசனத்தில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. அவற்றை பக்தர்கள் முன்பதிவு செய்துகொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.

நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் உள்ள டிக்கெட்டுகள் விவரம் வருமாறு:-

சுப்ரபாதம் 7,920, தோமாலை 140, அர்ச்சனை 140, அஷ்டதள பாதபத்மாராதனை 180, நிஜபாதம் 2,300.

கல்யாண உற்சவம் 12,825, ஆர்ஜித பிரம்மோற்சவம் 7,425, வசந்தோற்சவம் 13,200, ஊஞ்சல் சேவை 4,050, சகஸ்ர தீபலங்கார சேவை 15,600, விசே‌ஷ பூஜை 1,500 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளனjai